சென்னை
phone icon in white color

அழைப்பு

Book Free Appointment

USFDA-Approved Procedure

USFDA-Approved Procedure

Cost Effective

Cost Effective

No-Cost EMI

No-Cost EMI

No Hospitalization Required

No Hospitalization Required

Best Doctors For Axillary Breast in Chennai

ஆக்ஸிலரி மார்பகக் கட்டி என்றால் என்ன?

அக்குள் கட்டி என்றும் அறியப்படும் மார்பகக் கட்டி என்பது நிணநீர் கணுக்கள், கொழுப்புத் திசுக்கள் அல்லது மார்பக சுரப்பி திசுக்களின் வளர்ச்சியாகும். இந்த திசுக்களின் வளர்ச்சியானது, காரணத்தைப் பொறுத்து தற்காலிகமானதாகவோ அல்லது நீண்ட காலம் நீடிக்கக் கூடியதாகவோ இருக்கலாம். ஆரம்பத்தில், கட்டியானது ஒருவரின் அழகியலை மட்டுமே பாதிக்கலாம் ஆனால் காலப்போக்கில், கட்டியானது வலியையும் எரிச்சலையும் ஏற்படுத்தத் தொடங்கலாம். உங்களுக்கு ஆக்ஸிலாவில் இருக்கும் அதிகப்படியான திசுக்களை அகற்ற விரும்பினால், நீங்கள் பிரிஸ்டின் கேரின் மருத்துவர்களை நம்பலாம். கொழுப்புத் திசுக்களை அகற்ற குறைந்தபட்ச ஊடுருவும் லிபோசக்ஷன் நுட்பத்தையும், சுரப்பி திசுக்கள் மற்றும் நிணநீர் முனைகளை அகற்ற குறைந்தபட்ச எக்சிஷன் நுட்பத்தையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். ஆக்ஸிலரி மார்பக திசு சிகிச்சை பற்றி மேலும் அறிய, நீங்கள் எங்கள் மருத்துவ ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசலாம்.

கண்ணோட்டம்

know-more-about-Axillary Breast-treatment-in-Chennai
ஆக்ஸிலரி மார்பக திசுவிற்கான அறிகுறிகள்
    • அக்குள் பகுதியில் ஏற்படும் வீக்கம் மற்றும் மென்மைதன்மை 
    • ஆக்ஸிலா தடித்தல்
    • தோள்பட்டை அசைவின் வரையறுக்கப்பட்ட எல்லை 
    • ஆடைகளினால் ஏற்படும் எரிச்சல் 
ஆக்ஸிலரி மார்பக திசுவின் வகைப்பாடு
    • கிளாஸ் I- முழுமையான மார்பகம்
    • அதாவது சுரப்பி திசு, முலைக்காம்பு மற்றும் அரியோலா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 
    • கிளாஸ் II- சுரப்பி திசு மற்றும் முலைக்காம்புகளை மட்டுமே கொண்டுள்ளது. அரியோலா இல்லை . 
    • கிளாஸ் III- சுரப்பி திசு மற்றும் அரியோலாவை மட்டுமே கொண்டுள்ளது. முலைக்காம்பு அதாவது நிப்பிள் இல்லை.
    • கிளாஸ் IV- சுரப்பி திசுக்களை மட்டுமே கொண்டுள்ளது. 
    • கிளாஸ் V- சூடோமாமா- முலைக்காம்பு மற்றும் அரியோலாவை மட்டுமே கொண்டுள்ளது. சுரப்பி திசுக்கள் எதுவும் இல்லை. 
    • கிளாஸ் VI- பாலித்தீலியா - முலைக்காம்பு மட்டுமே இருக்கும். 
    • கிளாஸ் VII- பாலித்தீலியா அரியோலாரிஸ்- அரியோலாவை மட்டுமே கொண்டுள்ளது. 
    • கிளாஸ்  VIII- பாலித்தீலியாபிலோசா - முடியை மட்டும் கொண்டுள்ளது.
ஆக்ஸிலரி மார்பக திசு நீக்கத்தில் உள்ள சிக்கல்கள்
    • வடுக்கள் 
    • காயம் பிரித்தல் 
    • நரம்பு காயம் 
    • மீண்டும் வருவதற்கான வாய்ப்பு
ஆக்ஸிலரி மார்பக திசு நீக்கத்தின் பக்க விளைவுகள்
    • தொற்று
    • வலி 
    • ரத்தக் கசிவு 
    • செரோமா அல்லது திரவத் திரட்சி 
    • ஹெமடோமா அல்லது ரத்தத் திரட்சி 
    • விளிம்புகளின் முறையற்ற தன்மை 

சிகிச்சை முறை


நோய் கண்டறிதல்

கையின் கீழ் இருக்கும் திசுக்களை பகுப்பாய்வு செய்ய மருத்துவர் நோயாளிக்கு உடல் பரிசோதனையை செய்கிறார். தி அனிசோட்ரோபி ( திசுவின் இறுக்கம்) மற்றும் ஹைப்பர்ட்ரோஃபி ( திசுவின் அடர்த்தி) ஆகியவை கட்டியின் திசு வகையைத் தீர்மானிக்க சோதிக்கப்படுகின்றன.

கூடுதலான பகுப்பாய்வுக்கு, மருத்துவர் பின்வரும் பரிசோதனைகளை பரிந்துரைக்கிறார்-

  • அல்ட்ராசவுண்ட்- இந்த சோதனையானது அக்குள் கட்டியின் கட்டமைப்பையும், திசுக்களில் உள்ள அசாதாரணங்களையும் (ஏதேனும் இருந்தால்) கண்டறிய உதவுகிறது.
  • மேமோகிராம் – மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க இந்த பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.


ப்ரொசீஜர்

கையின் கீழ் உள்ள கட்டியை நீக்க, பிரிஸ்டின் கேர் மருத்துவர்கள் லிப்போசக்ஷன் மற்றும் எக்ஸ்சிஷன் நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். பின்வரும் படிமுறைகளில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது-

  • முதலில் நோயாளிக்கு அனெஸ்தீஷியா கொடுக்கப்படும். பொதுவாக அறுவை சிகிச்சைக்கு ஜெனரல் அனெஸ்தீஷியா பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில், லோக்கல் அனெஸ்தீஷியாவும் பயன்படுத்தப்படலாம்.
  • அறுவைசிகிச்சை நிபுணர் வெட்டுக்காயம் செய்யவேண்டிய இடத்தைக் கண்டறிந்து, இலக்குப் பகுதியில் லிப்போசக்ஷன் ஊசியை நுழைப்பார். லேசர் லிப்போசக்ஷன் பயன்படுத்தப்படுகிறது என்றால், அறுவை சிகிச்சை நிபுணர் லேசர் ஃபைபரை இலக்கு பகுதியில் நுழைப்பார்.
  • அக்குள் பகுதியில் உள்ள கொழுப்பை உடைத்து சக்ஷன் கருவி மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • மார்பக சுரப்பித் திசுக்கள் அக்குள் பகுதியை அடைந்திருந்தால், அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு ஸ்கால்பெல் அல்லது லேசரைப் பயன்படுத்தி திசுக்களை 3-4 செ.மீ கீறல் மூலம் அகற்றுவார்.
  • தையல்கள் மூலம் அல்லது சர்ஜிக்கல் க்ளூவின் உதவியுடன் வெட்டுக்காயம் மூடப்படும்.

முழு செயல்முறைக்கும் அதிகபட்சம் சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகும். செயல்முறைக்குப் பின் அதே நாளில் நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

ஏன் ப்ரிஸ்டின் கேர்?

Delivering Seamless Surgical Experience in India

01.

ப்ரிஸ்டின் கேர் கோவிட்-19 பாதுகாப்பானது

நோயாளியின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை எங்கள் கிளினிக்குகள் சிறப்பு கவனித்தன. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு, நமது மருத்துவமனை மற்றும் மருத்துவமனை அனைத்தும் வழக்கமாக கசக்கிவிடும்.

02.

அறுவை சிகிச்சை போது உதவி

A dedicated Care Coordinator assists you throughout the surgery journey from insurance paperwork, to commute from home to hospital & back and admission-discharge process at the hospital.

03.

நல்ல தொழில்நுட்பத்துடன் மருத்துவ உதவி

அறுவைசிகிச்சைக்கு முன் அனைத்து சிகிச்சை காசோலைகளிலும் நோயாளிக்கு மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. எங்கள் மருத்துவமனையில் நோய்களின் சிகிச்சைக்காக, லேசர் மற்றும் லேபராஸ்கோபிக் நடைமுறைகள் USFDA சான்றளிக்கப்பட்டன.

04.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பராமரிப்பு

We offer follow-up consultations and instructions including dietary tips as well as exercises to every patient to ensure they have a smooth recovery to their daily routines.

மருத்துவ சிகிச்சை

மார்பக திசுக்களுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சை எது?

பொதுவாக, லிபோசக்ஷன் மற்றும் எக்சிஷன் ஆகியவை மார்பகக் கட்டிகளுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் இரண்டு முறைகள். இந்த இரண்டு முறைகளும் கட்டியின் கலவையைப் பொறுத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக மருத்துவர் தான் மிகவும் பொருத்தமான நுட்பத்தை தீர்மானித்து இறுதி முடிவை எடுப்பார்.

மார்பக திசுக்களை அகற்றிய பிறகு கூடுதல் திருத்தம் தேவையா?

இல்லை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மார்பக திசுக்களை அகற்றிய பிறகு கூடுதல் திருத்தம் தேவையில்லை. சிறிய திருத்தங்கள் தேவைப்பட்டால், கைக்குக் கீழே உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற அறுவை சிகிச்சை நிபுணர் லிபோசக்ஷனைப் பயன்படுத்துவார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அக்குள் கட்டி மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் என்ன?

அறுவைசிகிச்சைக்குப் பிறகு அக்குள் கட்டி மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட மிகக் குறைவு. செயல்முறையின் போது கொழுப்பு திசுக்கள் பாதுகாப்பாக அகற்றப்படுகின்றன. இதனால், மீண்டும் நிலை திரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவு.

green tick with shield icon
Medically Reviewed By
doctor image
Dr. Sasikumar T
23 Years Experience Overall
Last Updated : February 20, 2025

அக்குள் கட்டியானது தீங்கற்றதா அல்லது புற்று நோயா என்பதை எப்படி அறிவது?

தீங்கற்ற கட்டிக்கும் புற்றுநோயான கட்டிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. இரண்டு கட்டிகளும் அக்குள் வளர்ச்சியாகத் தொடங்குகின்றன. ஆரம்பத்தில், நிணநீர் முனைகள் பெரிய அளவில் வளர்ந்து, இறுதியில், தொடர்புடைய அறிகுறிகள் தோன்றும்.

அக்குள் ஒரு தீங்கற்ற கட்டி பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்:

    • கட்டி தெளிவாக தெரியும்.
    • கட்டியின் அளவு 2 செமீ வரை இருக்கலாம்.
    • கட்டி அடிக்கடி வடிவத்தை மாற்றலாம்.
    • கட்டியில் வலி அல்லது கூச்ச உணர்வு இருக்கலாம்.
    • கட்டி தொற்றினால் காய்ச்சலும் வந்து போகலாம்.
    • அக்குள் கட்டி புற்றுநோயாக இருந்தால், மேலே குறிப்பிட்ட சில அம்சங்களுடன்,

பின்வரும் அறிகுறிகளும் இருக்கும்-

      • ஆற்றல் இழப்பு அல்லது சோர்வு நாள் முழுவதும் நீடிக்கும்
      • எதிர்பாராத எடை இழப்பு
      • கட்டியில் மென்மை
      • சுவாச பிரச்சனைகள்

புற்றுநோயின் கட்டத்தைப் பொறுத்து, நிலைமைக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அறிகுறிகள் காலப்போக்கில் மோசமாகிவிடும்.

உங்களுக்கு தீங்கற்ற கட்டியாக இருந்தாலும் அல்லது அக்குளில் புற்றுநோய் கட்டியாக இருந்தாலும், இரண்டுமே மிகவும் சிக்கலாக இருக்கலாம். முக்கிய வேறுபாடு என்னவென்றால், புற்றுநோய் கட்டி உயிருக்கு ஆபத்தானது மற்றும் ஒரு தீங்கற்ற கட்டி நோயாளியின் வாழ்க்கையையும் உடல் தோற்றத்தையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பாதிக்கிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், கட்டியை விரைவில் அகற்றுவது முக்கியம்.

மேலும் வாசிக்க
Disclaimer: **The result and experience may vary from patient to patient. ***By submitting the form, and calling you agree to receive important updates and marketing communications.

© Copyright Pristyncare 2025. All Right Reserved.